புஞ்சைபுளியம்பட்டியில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன் திருடியவர் கைது

புஞ்சைபுளியம்பட்டியில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன் திருடியவர் கைது
புஞ்சைபுளியம்பட்டியில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன் திருடியவர் கைது
புஞ்சைபுளியம்பட்டியில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன் திருடியவர் கைது புஞ்சைபுளியம்பட்டி ஆதிபராசக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் சாய் கோகுல்ராஜ் (வயது 40) நேற்று ரோட்டரி சங்க அலுவலகத்துக்கு சாய் கோகுல் ராஜ் தன்னுடைய காரில் சென்றார். பின்னர் வெளியை வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த செல்போன் மற்றும் பையை காணவில்லை. யாரோ கண்ணாடியை உடைத்து செல் போனை திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் சாய் கோகுல்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில் கார் கண்ணாடியை உடைத்து, செல்போன் திருடியது புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெள்ளப்பாறை மேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (24) என் பது தெரியவந்தது. இதைய - டுத்து ராஜ்குமாரை போலீ சார் கைது செய்தனர்
Next Story