ராசிபுரம் அருகே புதிய நிறுவனம் திறப்பு விழா வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் பங்கேற்பு..
Rasipuram King 24x7 |30 Sep 2024 7:29 AM GMT
ராசிபுரம் அருகே புதிய நிறுவனம் திறப்பு விழா வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம், ஆண்டகலூர் கேட்டில் ஶ்ரீ கிருஷ்ணா ஆயில் ஏஜென்சீஸ் எனும் புதிய நிறுவனத்தின் திறப்புவிழா நடைபெற்றது. நிறுவனத்தின் உரிமையாளர் தர்மராஜா விருந்தினர்களை வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி நிறுவனத்தை திறந்து வைத்தார். இராசிபுரம் மக்கள் நலக்குழு தலைவர் பாலு, செயலாளர் நல்வினை செல்வன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர். முதல் விற்பனையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.பழனிவேல், துவக்கி வைக்க, விஜயலட்சுமி தியேட்டர் சங்கீதா மணிகண்டன் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இணை செயலாளர் தேவி உதயகுமார், இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார், செய்தி தொடர்பாளர் ராகவன், இராசிபுரம் உள்ளாட்சி கடை வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் தலைவர் மாதேஸ்வரன், செயலாளர் பூபதி, மற்றும் அமமுக மாவட்ட அவைத் தலைவர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story