புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது!

புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது!
குற்றச் செய்திகள்
மணமேல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முத்துராஜபுரத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவர் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சம்சுதீனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story