மாநகராட்சியுடன் கோராம்பள்ளம் பஞ்சாயத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு!

மாநகராட்சியுடன் கோராம்பள்ளம் பஞ்சாயத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு!
கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று  ஆட்சியரிடம்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்தற்கு உட்பட்ட கோ.சுப்பிரமணியபுரம், வடக்கு காலான்கரை, பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வசித்து வருகிறோம். விவசாயம், கூலி வேலை மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறாேம்.  கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு இணைத்தால் 100 நாள் வேலை பறிபோய்விடும். எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். வீட்டு வாடகை உயரும். இதனால் மக்கள் பல சிரமத்திற்கு ஆாளாக நேரிடும். எனவே கோரம்பள்ளம் பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story