பழைய சுக்காலியூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.

பழைய சுக்காலியூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.
பழைய சுக்காலியூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம். கரூரை அடுத்த அப்பிபாளையம் ஏ கே ஆர் இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் வயது 65 இவரது மனைவி அய்யம்மாள் வயது 59. இவர்கள் இருவரும் செப்டம்பர் 29ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், கரூர் - மதுரை சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். கமலநாதன் டூவீலரை ஓட்ட அய்யம்மாள் பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் பழைய சுக்காலியூர் பாரத் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அதே சாலையில் ஈரோடு மாவட்டம், கீழப்பெருந்துறை, திண்டல் அருகே உள்ள சக்தி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணசாமி வயது 46 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், கமலநாதன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்த கணவன் - மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கமலநாதன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், காரை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பூர்ணசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story