மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 507 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பொம்மப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.1.60 இலட்சம் வட்டியில்லா பயிர்கடன், கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பட்டப்படிப்பு முடித்த 52 நபர்களுக்கு தலா ரூ.20,000/- வீதம் ரூ.10.40 இலட்சம் மற்றும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த 34 நபர்களுக்கு தலா ரூ.10,000/- வீதம் ரூ.3.40 இலட்சம் சேமிப்பு பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, 14.08.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட தாட்கோவிற்கு சொந்தமான 3 அரசு சமுதாய கூடங்களை பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பு செய்வதற்காக மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்.மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.33 இலட்சம் மதிப்பில் செயற்கை கால்களை வழங்கினார். இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் திருச்செங்கோடு சே.சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) .ச.பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story