நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம்

நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம்
நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் விஜயநாத் அனைவரையும் வரவேற்றார். தலைமை எழுத்தர் பிரசாத் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் காந்திநகர், அய்யாபட்டி பகுதிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, அய்யாபட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் பராமரிப்புப் பணி செய்வது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், தூய்மைப்பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story