பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பை தீப்பிடித்து கரும்புகை

பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பை தீப்பிடித்து கரும்புகை பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு
காங்கேயம் வெள்ளரபாறை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பாறை குழிகள் உள்ளது. இந்த குழியில் காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை குப்பைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரமாக இந்த தீயினால் 20 அடிக்கும் மேலாக கரும்புகை பரவி இருள் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்கள் இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குப்பைகள் கொட்டப்பட்ட குழிக்குள் தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Next Story