ஆரணி அனந்தபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணிதிட்ட முகாம்.

X
ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆரணி சைதாப்பேட்டை அனந்தபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணிதிட்ட முகாமினை நடத்தி வருகின்றனர். செப் 28 முதல் அக் 7 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நாட்டுநலப்பணிதிட்ட முகாமில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலமாக மாணவர்களுக்கு தீ விபத்து மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகள் பற்றியும், அதிலிருந்து மீட்பது எப்படி என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி எடுத்துரைக்கப்பட்டது. இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எம்.வசந்தா, ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.சங்கவை, அனந்தபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஹரி. தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் சரவணன் மற்றும் நிலைய அலுவலர் போக்குவரத்து பூபாலன். கலந்துகொண்டனர். முடிவில் நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர்கள் மகேந்திரன், சீனிவாசன் ஆகியோர் நன்றி கூறினர்.
Next Story

