களம்பூர் பகுதி மக்களிடையே ஆரணி எம்.பி நன்றி கூட்டம்.

களம்பூர் பகுதி மக்களிடையே ஆரணி எம்.பி  நன்றி கூட்டம்.
ஆரணி, அக்.1 ஆரணி அடுத்த களம்பூர் பகுதி மக்களிடையே ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் வெற்றி பெற வைத்ததற்காக நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.
கடந்த மக்களவை தேர்தலில் ஆரணி மக்களவை தொகுதியில் திமுக சேர்ந்த எம்.எஸ்.தரணிவேந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் போளூர் சட்டமன்ற தொகுதியில் நன்றி கூறினார். பின்னர் இறுதியில் ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றதில் அப்பகுதி மக்களிடையே வாக்களித்து வெற்றி பெற வைத்ததற்கு நன்றி கூறினார். உடன் போளூர் தொகுதி பொறுப்பாளர் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன், களம்பூர் நகர செயலாளர் வெங்கடேசன், களம்பூர் பேரூராட்சித் தலைவர் கே.டி.ஆர்.பழனி, துணைத்தலைவர் ஜான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story