ரயிலில் கூடுதல் பெட்டிக்கு எதிர்பார்ப்பு

ரயிலில் கூடுதல் பெட்டிக்கு எதிர்பார்ப்பு
நெல்லை-செங்கோட்டை ரயில்
நெல்லை-செங்கோட்டை ரயில்களில் எப்போதும் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. காலை மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் என ஏராளமானோர் இதில் பயணிக்கின்றனர். மேலும் விடுமுறை நாளில் வெளியூர் செல்வோர் அதிகளவு பயணிக்கின்றனர். இதனால் இடம் கிடைக்காமல் நடைபாதை, படிக்கட்டுகளில் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் கிளம்பியுள்ளது.
Next Story