ஆத்தங்கரை தர்ஹாவில் கந்தூரி விழா

ஆத்தங்கரை தர்ஹாவில் கந்தூரி விழா
கந்தூரி விழா
தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற தர்ஹாக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையத் அலி பாத்திமா தர்ஹாவும் ஒன்றாகும். இந்த தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமர்சியாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்துரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று வரை வெகு விமர்சியாக நடைபெற்று வருகின்றது.இதில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டத்திலிருந்து ஏராளமான முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கந்தூரி விழாவிற்கான ஏற்பாட்டை தர்ஹா நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story