கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அட்வைஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அட்வைஸ்
அட்வைஸ்
தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்து இளைஞர்கள் தோல்வியை எதிர்கொண்டு வாழ்வில்வெற்றி பெற கற்றுக்கொள்ள வேண்டும்' என கலெக்டர் பேசினார். கள்ளக்குறிச்சியில், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட அளவிலானவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர், எம்.எல்.ஏ., சான்றிதழ் வழங்கினர். விழாவில் கலெக்டர் பேசுகையில், 'தற்போதைய இளைய சமுதாயத்தினர் தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தெரியாமல் உள்ளார்கள்.தோல்வியே வெற்றிக்கு முதல்படி. தோல்வி ஏற்படும்போது துவண்டு விடாமல்அதனை எதிர்கொண்டு வெற்றி பெற தயார்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் குமார், ஒன்றிய சேர்மன்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story