டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழப்பு

தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா தொண்டமாங்கிணம் ஊராட்சி எரிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் மலையாளன் மகன் பூமிநாதன் (21). இவர் நேற்று இரவு எரிச்சலூர் குளம் அருகே தனது டிராக்டர் வாகனத்தை உழவு பணியை முடித்துவிட்டு சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஆடு குறுக்கே வந்ததால் திடீரென பிரேக போட்டதில் டிராக்டர் தலைகீழாக புரண்டு 10 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் காயம் பட்ட பூமிநாதனை தோகைமலை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். அதனையடுத்து அவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. இது குறித்து மலையாளன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு.
Next Story