ஏ டி எம் கொள்ளையர்களை பிடிக்க முயன்று படுகாயம் அடைந்த காவலர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாராளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ் குமார்.

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை பிடிக்க துரிதமாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறையினரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வாழ்த்தி கௌரவித்தார்.
. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இன்று மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை பிடிக்க துரிதமாக செயல்பட்டு சிறப்பாக பணிபுரிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை அலுவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கௌரவித்தார். நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு 27.09.2024-ம் தேதி திருச்சூர் மாவட்ட காவல்துறையிடம் இருந்து ஏ.டி.எம் கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள் வெள்ளை நிற கிரிட்டா கார் மற்றும் ராஜஸ்தான் அல்லது ஹரியானா மாநில பதிவு கொண்ட கண்டெய்னர் லாரியில் வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்த வாகனத்தை காவல்துறையினர் பின்தொடர்ந்து விரட்டி சென்றபோது, மேற்கூரிய வாகனமானது சங்ககிரி, சங்ககிரி ரவுண்டானா, வெப்படை 4 ரோடு வழியாக அதிவேகமாக சென்று சாலையில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதியது. பொதுமக்களின் உயிருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேமாக சென்ற அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற ஆய்வாளர், சன்னியாசிபட்டி அருகே தடுத்து நிறுத்தினார். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் மல்லசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் தப்பி சென்ற இருவரையும் பின்னால் துரத்தி சென்று பிடிக்க முற்பட்ட போது தப்பி செல்ல முயன்றவர்களை சரணடைய எச்சரிக்க விடுத்துள்ளார்கள். காவல்துறையினர் தன்னை தற்காத்து கொள்ளவும், உதவி ஆய்வாளரின் உயிரை காப்பாற்றவும், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இதில் ஒரு கொள்ளையார் துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மேற்படி சம்பவத்தில் காயமுற்ற காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை பிடிக்க துரிதமாக செயல்பட்டு சிறப்பாக பணிபுரிந்த நாமக்கல் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து கௌரவித்தார். தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அனைவரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் பி.எம்.இமயவரம்பன் உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல் துறையினர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story