இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்
வடமாநில தம்பதி கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி செல்வதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அருள்புரம் அண்ணாநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்குமார் ஷா மற்றும் பிரவீனா கவுண்டி என்ற வடமாநில தம்பதிகள் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வடமாநில தம்பதிகள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story