நாட்றம்பள்ளி அருகே பெண் மர்ம மரணம்

நாட்றம்பள்ளி  அருகே பெண் மர்ம மரணம்
நாட்றம்பள்ளி அருகே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு மர்ம மரணம் அடைதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது காரணமாக மருத்துவமனையின் உள்ளே உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வெல்க்கல்நாத்தம் அடுத்த வாலூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி சாரதா (45) இவருக்கு இயற்கை உபாதை கழிப்பதில் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது இதன் காரணமாக நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள RKTதனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர் பிரவீன் தங்களுக்கு பைல்ஸ் பிரச்சனையில் உள்ளதாகவும் இதன் காரணமாக இன்று வாருங்கள் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எல்லாம் சரியாகும் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் மருத்துவமனைக்கு வந்த சாரதாவுக்கு டிரீட்மென்ட் கொடுத்தவுடன் வாயில் நுரை தள்ளி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளாகியுள்ளார் அதனை தொடர்ந்து சாரதாவை மருத்துவர்கள் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது இந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர் அதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் RKT தனியார் மருத்துவமனையில் சாரதாவின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையின் செவிலியர்களை அடிக்கவும் முற்பட்டனர். இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீஸர் விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர் சாரதாவின் உயிரிழப்பிற்கு முறையான காரணம் தெரிந்தால் மட்டுமே உடலை எடுத்துச் செல்வோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டு வருகிறது
Next Story