தாளவாடியில் சூதாட்ட பணம் பறிமுதல் விவகாரம் போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

தாளவாடியில் சூதாட்ட பணம் பறிமுதல் விவகாரம் போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
தாளவாடியில் சூதாட்ட பணம் பறிமுதல் விவகாரம் போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
தாளவாடியில் சூதாட்ட பணம் பறிமுதல் விவகாரம் போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் தாளவாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கிடுசாமி, தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு இளங்கோ ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டு இருந்த கும்பலை பிடித்து அவர் கள் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கா மல் மறைத்தனர். இந்த விவரம் வெளியில் தெரிய வந்ததால் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வெங்கிடுசாமி, போலீஸ் ஏட்டு இளங்கோ ஆகியோர் ஈரோடு ஆயுதப்படை பிரிவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீஸ் ஏட்டு இளங்கோவை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தர விட்டு உள்ளார்.
Next Story