உலக மூத்த குடிமக்கள் தின விழா

உலக மூத்த குடிமக்கள் தின விழா
தோகைமலை சேர்மன் சுகந்தி சசிகுமார் கலந்துகொண்டு பரிசு வழங்கினார்
கரூர் மாவட்டம் தோகைமலையில் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் மூத்த குடிமக்களை ஆற்றலளிக்கும் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குமுளி வோசார்டு மற்றும் திருச்சி ஓ.டி.ஏ நிறுவனங்கள் சார்பாக உலக மூத்த குடிமக்கள் தினம் விழா நடந்தது. தணியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருச்சி ஓ.டி.ஏ நிறுவனர் லோபிதாஸ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தனமாலினி கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சின்னையன், அம்பாள் குமார், புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தோகைமலை ஒன்றியக் குழு தலைவர் சுகந்தி சசிகுமார் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற முதியவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பென்ஷி சில்வஸ்டர் கலந்து கொண்டு பேசுகையில்: தோகைமலை ஒன்றியத்தில் உள்ள கல்லடை, ஆர்டிமலை, ஆர்ச்சம்பட்டி, வடசேரி மற்றும் தோகைமலை ஆகிய ஊராட்சி பகுதிகளில் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் மூத்த குடிமக்களை ஆற்றலளிக்கும் திட்டத்தின் கீழ் முதியவர்களுக்கான சிறப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் கீழ் முதியவர்களுக்கான மருத்துவ உதவிகள், வாழ்வாதார திட்ட பணிகள், மூத்த குடிமக்களுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் போன்ற சிறப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் முதியவர்களுக்கு இலவசமாக கண், காது, உப்பு, சலி, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்பட பல்வேறு பரிசோதனைகளை ஒவ்வொரு மாதங்களும் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு அவர்களை கண்காணித்து வரப்படுகிறது. இதேபோல் முதியவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு, அவர்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை பெற்று தருதல் போன்ற பணிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்று பேசினார். அதனை தொடர்ந்து முதியவர்களுக்கான இசை நாற்காலி, பாடல்கள், பேசுதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற முதியவர்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து முதியவர்களுக்கும் பரிசுகள் அளித்து உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டாளர்கள் செல்வம், பூபதி மற்றும் வோசார்டு மற்றும் ஓ.டி.ஏ நிறுவன பணியாளர்கள் உள்பட தோகைமலை சுற்றுவட்டாரத்தில் இருந்து திரலான முதியவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story