பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு
மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை
மங்கலம்பேட்டை அருகே, கட்டியநல்லூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஜோதிமணி மனைவி மீனா (28). இவர், அங்கு, தனது 3 குழந்தைகள், மாமனார் மற்றும் மாமியாருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, இவர், தனது மகன் குருதர்ஷனுடன் அவருடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, முன் விரோதம் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகள் சந்திரலேகா, மகன் பால்ராஜ் மற்றும் பூமாலை மகன் பாலு ஆகியோர் மீனாவை அசிங்கமாக திட்டி, தாக்கி, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், பால்ராஜ், பூமாலை மற்றும் சந்திரலேகா ஆகிய 3 பேர் மீதும் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story