மங்கலம்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு

மங்கலம்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
தீயணைப்புத் துறையினர் மீட்பு
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலத்தில் நடந்து சென்ற போது 60 அடி ஆழத்தில் அமைந்திருந்த கிணற்றில் திடீரென தவறி விழுந்தார். அப்போது கிணற்றில் 6 அடி அளவிற்கு தண்ணீர் இருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற மங்கலம்பேட்டை தீயணைப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பழனிச்சாமியை பத்திரமாக மீட்டு மங்கலம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story