புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியர் மாளிகையை ஆட்சியர் ஆய்வு

புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியர்  மாளிகையை ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுப்பணித்துறை பயணியர் ஆய்வு மாளிகை கட்டிடக் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம் மற்றும் உறுதி தன்மை குறித்து கேட்டறிந்தார். இதில் செய்தி மக்கள் தொடர்பு பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story