காரத்தொழுவு அருகே தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி காயம்!

காரத்தொழுவு அருகே தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி காயம்!
உடையார்பாளையம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா காரத்தொழுவு அடுத்த உடையார் பாளையம் பகுதியில் இருந்த தேனீக்கள் கூட்டம் கலைந்து திடீரென சுற்றி இருந்தவர்களை கொட்ட தொடங்கியுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர். அங்கிருந்த மூதாட்டி ஒருவரை சுற்றுவளைத்து தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த வழக்கறிஞர் செல்வகுமார் உட்பட பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த கணியூர் காவல் துறையினர் மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியோடு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Next Story