செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதால் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய திமுக தொண்டர்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதால் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய திமுக தொண்டர்.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதால் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய திமுக தொண்டர். கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் என்கிற தமிழரசன். திமுக கட்சித் தொண்டர். இவர்,தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த போது, அவருக்கு ஜாமீன் கிடைத்து மீண்டும் அமைச்சராக வேண்டுமென, கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சாமி கோவிலில் மொட்டை அடிப்பதாக வேண்டுதல் வைத்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி ஜமீனில் வெளிவந்து, மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்றி தந்த இறைவனுக்கு வேண்டிக் கொண்டது போல இன்று தாந்தோணி கல்யாண வெங்கடராமசாமி கோவிலில் மொட்டை அடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். இதனைத் தொடர்ந்து அருள்மிகு கல்யாண வெங்கடரமண சாமி கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் சுமார் 200 பேருக்கு அன்னதானமும் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, உள்ளிட்ட திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உடன் இருந்து மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story