கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொருாளர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஜெகன், மாவட்ட பிரசார செயலாளர் மாதேஸ்வரன், வி.ஏ.ஓ., சங்க மாவட்ட தலைவர் கருணா நிதி, துணைத் தலைவர் ராஜா, இணை செயலாளர் நாகராஜ், தலைமை நிலைய செயலாளர் வினோத், ஒருங்கிணைப்பாளர் விஜயபாரதி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வரதராஜன் கண்டன உரையாற்றினார். வி.ஏ.ஓ.,க்களுக்கு டிஜிட்டல் கிராப் சர்வே தொழில்நுட்ப உபகரண கருவி வழங்கிடவும், செயலியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நிர்வாகிகள் மணிகண்டன், கலையரசன், செந்தில்நாதன், சரவணன், உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story