துாய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

துாய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
முகாம்
சின்னசேலம் பேரூராட்சிஅலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, செயல் அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்கள், திடக்கழிவுமேலாண்மை பணியாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர் சார்லஸ், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர்கள் சீனு, சுரேஷ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
Next Story