எடப்பாடியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

எடப்பாடியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா தலைமையில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக தூய்மையும் வளர்ச்சியும் கொண்ட நாடாக இந்தியா இருக்க வேண்டும் என மகாத்மா காந்தி கனவு கண்டு, இந்திய தாய்க்கு சுதந்திரம் பெற்று தந்தவர் மகாத்மா காந்தியடிகள், அவரது கனவை நினைவாக்கும் வகையில் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நாட்டை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story