குமாரமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்

குமாரமங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்
18 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றம்
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் குமாரமங்கலம் ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். து.தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, மூன்றாம் பாலினத்தவர்களை மதிப்பது, சமூகநீதி பேணுதல், தூய்மை குடிநீர், குழந்தை திருமணம் தடுப்பது உள்ளிட்ட 18 தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் மதியழகன் வாசித்தார்.
Next Story