க. பரமத்தி பஸ் ஸ்டாப்பில் நின்ற முதியவர் மீது கார் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு.

க. பரமத்தி பஸ் ஸ்டாப்பில் நின்ற முதியவர் மீது கார் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு.
க. பரமத்தி பஸ் ஸ்டாப்பில் நின்ற முதியவர் மீது கார் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தென்னிலை, கோடந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் வயது 58. இவர் செப்டம்பர் 30ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் க.பரமத்தி பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, கரூர், சுங்க கேட் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வயது 37 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் நின்று கொண்டிருந்த பரமசிவம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பரமசிவத்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பரமசிவத்தின் மகன் பிரகாஷ் வயது 25 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.
Next Story