காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெறுப்புணர்வுக்கு எதிரான விழிப்புணர்வு பாதயாத்திரை

300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.
காந்தி ஜெயந்தி, கர்மவீரர் காமராஜர் நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் முன்னிட்டு இன்று பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெறுப்புணர்வுக்கு எதிரான விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாணிக்கபுரம் சாலையில் இருந்து பொங்காளி அம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். இதன் தொடர்ச்சியாக காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோரின் திரு உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story