எலச்சிபாளையத்தில் கிராமசபை கூட்டம்

எலச்சிபாளையத்தில் கிராமசபை கூட்டம்
எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், தூய்மை பாரத இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. நேற்று, காந்திஜெயந்தியை முன்னிட்டு, நாடுமுழுவதும் கிராமசபை கூட்டம் நடந்தது.
நேற்று, காந்திஜெயந்தியை முன்னிட்டு, நாடுமுழுவதும் கிராமசபை கூட்டம் நடந்தது. அதன்படி, எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட, 29பஞ்சாயத்துகளில் நடந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சிகளின் 2023–24ம்ஆண்டு தணிக்கை அறிக்கை, சத்துணவுதிட்ட கணக்குகள் உள்ளிட்டவை முன்னிலைபடுத்தப்பட்டது. மேலும், முதலமைச்சரின் காலை உணவுதிட்ட செயல்பாடுகள், ஜல்ஜூவன் இயக்கம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, தூய்மை பாரத இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூகதீமை நிராகரிப்பு, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. பி.டி.ஓ.,லோமணிகண்டன் பார்வையிட்டார்.
Next Story