காங்கேயம் அருகே விஷ மாத்திரையை அருந்தி முதியவர் தற்கொலை

காங்கேயம் அருகே விஷ மாத்திரையை அருந்தி முதியவர் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சல்பாஸ் என்னும் விஷ மாத்திரையை உட்கொண்டு முதியவர் கொலை காங்கேயம் காவல்துறை விசாரணை
காங்கேயம் நத்த காட்டுவலசு பகுதியில் வசித்து வந்தவர் ஆட்சியப்ப கவுண்டர் (வயது 74). இவர் 10 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு காங்கேயம் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆட்சியப்ப கவுண்டர் நேற்று முனிடம் இரவு உறங்கச் சென்றவர் நேற்று காலை அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் சல்பாஸ் மாத்திரையை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Next Story