விருத்தாசலத்தில் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி

விருத்தாசலத்தில் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி
ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை
காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு காமராஜர் தொண்டர்கள் பேரவை சார்பில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவ சிலைக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீரராகவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகர் மன்ற உறுப்பினர் கருணாநிதி, வேதமாணிக்கம், நீதி, வைத்தியநாதன், சபரிநாதன், முத்துக்குமார், தலைமையாசிரியர் கிடியான், ஆசிரியர்கள் கனகராஜ், சுரேஷ்குமார், மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story