அனந்தபுரம் நகராட்சி பள்ளியில் நாட்டுநலப்பணிதிட்ட முகாம்.

X
ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எஸ்.மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆரணி சைதாப்பேட்டை அனந்தபுரம் நகராட்சி பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமினை செப் 28 முதல் நடத்தி வருகின்றனர். 6வது நாளான வியாழக்கிழமை பள்ளியில் தூய்மை பணியும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியினை நடத்தினர். இதில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன் கலந்துகொண்டு மேற்பார்வையிட்டார். மேலும் நாட்டு நலப்பணிதிட்ட மாணவர்களுக்கு உணவு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சு.சீனிவாசன், கு.மகேந்திரன். .முதுகலைஆசிரியர்கள் விஜயகுமார், உடற்கல்வி ஆசிரியர் துரைசிங், முதுகலைஆசிரியர்கள், ஜெகதீசன் ,ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

