வேலகவுண்டம்பட்டி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி.

வேலகவுண்டம்பட்டி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி.
வேலகவுண்டம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டியை சேர்ந்தவர் முருகேசன் (75). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் புதன்கிழமை காலை தனது மொபட்டில் நாமக்கல் செல்வதற்காக  மாணிக்கம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் ஒன்று முன்னாள் மொபட்டில் சென்று கொண்டிருந்த முருகேசன் மீது மோதியுள்ளது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி  சேலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் புதன்கிழமை இரவு  உயிரிழந்தார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story