ராமநாதபுரம் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது

மாவட்ட காங்கிரஸ் கட்சியின்சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின்பு அங்கிருந்து,வண்டிக்காரதெரு, அக்ரஹாரம் ரோடு இருதியில் அரண்மனைவரை ஒற்றுமை பயணம் நடைபெற்றது.இதற்கு பின் கண்டன தெருமுனை பிரசாரம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ராமநாதபுரம் பொருப்புக்குழு உறுப்பினர் ராஜாராம்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஒற்றுமை பயணத்துக்கு பொறுப்பாளராக இதயத்துல்லா,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ராமநாதபுரம் முன்னாள் மாவட்டதலைவர் செல்லத்துரை அப்துல்லா மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ராமலட்சுமி மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்களும் மற்றும் அணித் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைவர்கள் மாவட்ட துணைத் தலைவர்கள் வட்டாரத் தலைவர்கள் நகரத் தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story