ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் நவராத்திரி விழா..
Rasipuram King 24x7 |4 Oct 2024 3:35 PM GMT
ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் நவராத்திரி விழா..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி சிறப்பு பூஜைகள், கொலு பொம்மைகள் அமைத்து சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதம் 2.10.24. புதன்கிழமை முதல், 12.10.24. சனிக்கிழமை வரை 10 நாட்கள் நவராத்திரி சிறப்பு பூஜைகள் கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கொலு பொம்மைகள் அமைத்து தினந்தோறும் பல கட்டளைதாரர்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து கொலு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து கொலு பொம்மைகளை பார்வையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story