நெல்லையிலிருந்து குலசைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நெல்லையிலிருந்து குலசைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நெல்லை வழியாக திருச்செந்தூர் மற்றும் குலசைக்கு செல்கின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் குலசேகரப்பட்டினத்திற்கு நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story