ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
மதுராந்தகம் அருகே தென்திருப்பதி என அழைக்கப்படும் மலைவையாவூர் மலை மீது உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை ஆன இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த மலைவையாவூரில் உள்ள தென்திருப்பதி எனும் அருள்மிகு அலமேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் புரட்டாசி 3 ஆம் சனிக்கிழமையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் மூலவரும்,ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்சவரும் காட்சியளித்தனர். காலையிலிருந்து நீண்ட வரிசையில் இருந்து பக்தர்கள் பெருமாளையும், தாயாரையும் தரிசித்து வருகின்றனர்.கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.
Next Story