மலையேறும் பக்தர்களுக்கு சுக்குகாப்பி வழங்கும் சமூக ஆர்வலர்

மலையேறும் பக்தர்களுக்கு சுக்குகாப்பி வழங்கும் சமூக ஆர்வலர்
சங்ககிரி :மலையேறும் பக்தர்களுக்கு சுக்குகாப்பி வழங்கும் சமூக ஆர்வலர்
சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 3வது வாரமாக சங்ககிரி மலையறும் பக்தர்களுக்கு சுக்குகாப்பி வழங்கி வருகிறார். சங்ககிரியை அடுத்த ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.சி.ராமசாமி. அவர் கடந்த சில ஆண்டுகளாக சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளை மலையேறி தரிசிக்க செல்லும் பக்தர்கள் எவ்வித களைப்புமின்றி ஏறி செல்ல வேண்டுமென்பதற்காக சுக்குகாப்பியை வழங்கி வருகிறார். இதனையடுத்து நிகழாண்டும் புரட்டாசி 3 வார சனிக்கிழமைகளிலும் வழங்கினார். அவரது சேவையை பக்தர்கள் பாராட்டினர்.
Next Story