இளம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இளம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆரணி, அக் 5. ஆரணி வட்டம், குண்ணத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆரணி வட்டம், குண்ணத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் துவக்கிவைத்தார். மேலும் இதில் புதிய இளம் வாக்காளர்களிடம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த சுவரொட்டி விளம்பரம், கட்டுரைப் போட்டி,கோல போட்டி,பேச்சு போட்டி மற்றும் இதர போட்டிகள் நடைபெற்றது. வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வாக்காளராக பதிவு செய்ய தகுதி உள்ள மாணவர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரால் படிவம்-6 வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆரணி வட்டாட்சியர் கௌரி, மண்டல துணை வட்டாட்சியர் தேவி, தேர்தல் துணை வட்டாட்சியர் சுகுமார் மற்றும் இதர வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story