விருத்தாசலம் நகராட்சியில் நிலுவையின்றி வரி செலுத்தியவருக்கு பரிசு

விருத்தாசலம் நகராட்சியில் நிலுவையின்றி வரி செலுத்தியவருக்கு பரிசு
நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் வழங்கினார்
விருத்தாசலம் நகராட்சியில் வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில் மொபைல் போன் பரிசு வழங்கப்பட்டது. விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் குடிநீர், சொத்து வரி, தொழில் வரி, உள்ளிட்ட பல்வேறு வரிகள் நகராட்சி மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிர்வாகம் சார்பில் வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது அதன்படி நிலுவையின்றி வரி செலுத்தும் நபர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.  இதில் விருத்தாசலம் நகராட்சி 17 வது வார்டை சேர்ந்த சுப்பையா என்பவர் நிலுவையின்றி வரி செலுத்தியதை வரவேற்று நகர்மன்ற தலைவி டாக்டர் சங்கவி முருகதாஸ் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தார். மேலும் இதுபோன்று விருத்தாசலம் நகராட்சியில் பொதுமக்கள்  நிலுவையின்றி வரியை செலுத்தினால் தொடர்ந்து பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ஷகிலா பானு, நகர் மன்ற உறுப்பினர்கள் தங்க அன்பழகன், ஆட்டோ பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story