தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்தவர் மாதையன் மகன் ரமேஷ் (43). இவர் குளித்தலை அருண் ஜீவல்லரி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற ரமேஷ் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story