மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி!

மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி!
தூத்துக்குடியில் மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி!
தூத்துக்குடியில் தண்டவாள பராமரிப்பு பணி நிறைவு பெறாததால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.  தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள 1ஆம் ரயில்வே கேட், பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்.5) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் பணிகள் தற்போது வரை நிறைவு பெறவில்லை.  இதனால் இன்று மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பவில்லை. இதையடுத்து தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Next Story