கரூரில்,குற்றம் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கரூரில்,குற்றம் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கரூரில்,குற்றம் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல் துறையினர் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இக் கூட்டத்தில் கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோன்று சைபர் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு குறித்தும், பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிவது குறித்தும், விபத்துக்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், போதை பொருட்கள் தடுப்பு குற்றங்களையும், தடுப்பது பற்றியும், ஆன்லைன் மூலம் பணம் பறிப்பு, அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து லிங்க் வந்தால் அதை தொடக்கூடாது என்பது குறித்தும், ஆன்லைன் மோசடியில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது பற்றியம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் கருத்துக்களும் கேட்கப்பட்டது.
Next Story