மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாமக்கல்லில் காங்கிரஸார் பேரணி!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் பேரணியில் கோஷங்கள் எழுப்பினர்
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தியாகிகள் ஸ்தூபி நினைவிடத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியில் மாநில துணைத் தலைவர் செழியன், நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தித் தொடர்பாளரும், ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவருமான டாக்டர் PV.செந்தில் செந்தில் மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.இப்பேரணி கொசவம்பட்டி, அண்ணாநகர், அலங்காநத்தம் பிரிவுசாலை, பழைய பாளையம், முத்துகாபட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி வழியாக ராசிபுரம் சென்று நிறைவடைந்தது.
Next Story