பிரபல ரவுடியை போலிசார் பிடிக்க முற்பட்ட போது கால் முறிவு

பிரபல ரவுடியை போலிசார் பிடிக்க முற்பட்ட போது கால் முறிவு
திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த பிரபல ரவுடியை போலிசார் பிடிக்க முற்பட்ட போது தப்பி ஓட்டம், கிழே விழுந்ததில் கால் முறிவு அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை
திண்டுக்கல் பேகம்பூர் நத்தர்ஷா பகுதியைச் சேர்ந்தவர் டைல்ஸ் சாகுல் ( என்ற) சாகுல் ஹமீது. இவர் மீது 2 கொலை வழக்கு கொலை முயற்சி வழக்கு வழிபறி வழக்கு என 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு திண்டுக்கல் நாகல்நகர் அரண்மனை குளம் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டார். அப்பொழுது ரோந்து சென்ற போலீசாரை கண்டதும் தப்பிக்கும் முற்பட்டு ஓட்டம் பிடித்தார். அவரை காவல்துறையினர் விரட்டிச் சென்றனர். அப்பொழுது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதனை அடுத்து காவல்துறையினர் சாகுல் ஹமீதை பிடித்தனர். பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஷாகுல்ஹமீது உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story