பேச்சிப்பாறையில் பழங்குடியிருக்கான சிறப்பு குறை தீர்வு முகாம்  

பேச்சிப்பாறையில் பழங்குடியிருக்கான சிறப்பு குறை தீர்வு முகாம்  
கலெக்டர் பங்கேற்பு
குமரி மாவட்டம்  பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தோட்டமலை அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று (05-ம் தேதி) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா முன்னிலையில் பழங்குடியினருக்கான சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெற்றது.        இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.      மகளிர் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வாழ்வாதார கடனுதவி திட்டத்தின் கீழ் இரமணி என்பவருக்கு ரூ.25,000-க்கான  காசோலையினை வழங்கினார். தொடர்ந்து பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்டில் நடைபெற்றுவரும் பாலப்பணியை  பார்வையிட்டார். நடைபெற்ற முகாமில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி,   பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ் உட்பட பலர்  கலந்து கொண்டார்கள்.
Next Story