சேதமான இறைச்சி கூடம்

சேதமான இறைச்சி கூடம்
வேடசந்தூரில் சேதமான இறைச்சி கூடம்
வேடசந்துார் பேரூராட்சிக்கு சொந்தமான இறைச்சி கூடம் தர்கா வளாக பகுதியில் உள்ளது. நகர் பகுதியில் ஆட்டுக்கறி கடை நடத்தும் உரிமையாளர்கள், இந்த கட்டத்திற்குள் ஆடுகளைக் கொண்டு வந்து அறுத்து பாதுகாப்பாக கடைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். வேடசந்துாரில் ஞாயிறு வாரச்சந்தை நடக்கும் நாட்களில் 200 ஆடுகள் இங்கு அறுக்கப்படுகிறது. வியாபாரிகள் பயன்பாட்டிற்கான இந்த கட்டடம் கட்டி நீண்ட காலமானதால், தற்போது கூரை,சுவர்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. வியாபாரிகளின் நலன் கருதி இக்கட்டடத்தை இடித்து விட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கட்டடத்தை கட்டி தர பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story