கவுந்தப்பாடி அருகே விபத்தில் கண்டக்டர் பலி

கவுந்தப்பாடி அருகே விபத்தில் கண்டக்டர் பலி
கவுந்தப்பாடி அருகே விபத்தில் கண்டக்டர் பலி கவுந்தப்பாடி அருகே உள்ள பனங்காட்டூர் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. அவருடைய மகன் பிரபு (வயது - 26). இவர் கவுந்தப்பாடியில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் பிரபு நேற்று முன்தினம் இரவு பனங்காட்டூர் ஓம்சக்தி நகர் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சாக்கடையில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பிரபு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story